திருவண்ணாமலையின் கிரிவலமும் அதன் சிறப்புகளும்

திருவண்ணாமலை ஆனது ஒரு ஆன்மீக மகிமை வாய்ந்த ஒரு சிறப்பான மலையாகும்.இந்த அண்ணாமலையார் கோயிலை சுற்றி 14 கிலோமீட்டர் நான் நமது கால்களால் நடை பயணம் செய்வதுதான் திருவண்ணாமலை கிரிவலம் ஆகும். இது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் மீதுள்ள அதிக பக்தியின் காரணமாக அனைவரும் திருவண்ணாமலையை கிரிவலமாக சுற்றி வருகின்றனர். 

இந்தக் கோயிலில் நல்ல தினங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தமிழ்நாடு மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்து இந்த திருவண்ணாமலை கிரிவலமாக சுற்றி வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் மக்கள் லட்சக்கணையில் வந்து இந்த திருவண்ணாமலையில் ஆன்மீக சிறப்பையும் கோயிலையும் தரிசித்து செல்கின்றனர். திருவண்ணாமலை கோயிலை சுற்றி உள்ள கிரிவல பாதையில் 99 கோயில்கள் 8 அஷ்ட லிங்கங்கள் மற்றும் 16 விநாயகர் கோயில்கள் மற்றும் 7 முருகன் கோயில்கள் உள்ளடக்கியது. 


பௌர்ணமி அன்று திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இந்த நாள் இருக்கிறது.எனவே பக்தர்கள் அனைவரும் பௌர்ணமி அன்று அதிக அளவில் திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வருகிறார்கள். திருவண்ணாமலையை கிரிவலம் நீங்கள் சுற்ற வேண்டும் என்றால் பௌர்ணமி,பிரதோஷ நாட்கள் அல்லது கார்த்திகை மாதம் அன்று கிரிவலம் சுற்றினால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என ஒரு ஐதீகம் உள்ளது. எனவே நீங்கள் இந்த சிறப்பு தினங்கள் என்று திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுங்கள். திருவண்ணாமலை கிரிவலம் சுற்றும் பொழுது சுற்றி உள்ள கோயில்களையும் நீங்கள் தரிசனம் பெற்று வரலாம். இந்த பயணமானது உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ஆன்மீக சிறப்புகள்:
  • திருவண்ணாமலையில் மழையே சிவலிங்கமாக கைவிடப்படுகிறது இந்த திருவண்ணாமலை ஆனது ஒரு அக்னி தளமாகும். 
  • இந்த புனித தலத்தை மனதில் நினைத்தாலே பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே நீங்களும் ஒரு முறையாவது திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றுங்கள். 
  • இந்த திருவண்ணாமலை நீங்கள் பௌர்ணமி தினத்தன்று சுற்றினால் மிகுந்த புண்ணியங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. எனவே நீங்கள் பௌர்ணமி தினத்தன்று இந்த மலையை கிரிவலம் சுற்றினால் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும். 
  • திருவண்ணாமலையை சுற்றி அஷ்ட லிங்கங்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்திர லிங்கம்,அக்னி லிங்கம்,யம லிங்கம்,நிருதி லிங்கம் வருண லிங்கம்,வாயு லிங்கம்,குபேர லிங்கம்,ஈசானி லிங்கம் என எட்டு லிங்கங்கள் இந்த மலையை நீ சுற்றி மிகவும் அற்புதமாக உள்ளது.அதனை நீங்கள் மழையை சுற்றி வரும் பொழுது காணலாம்.
  • இந்த திருவண்ணாமலை சுற்றி கிரிவலம் வரும் பொழுது அங்குள்ள காடுகளில் உள்ள மூலிகை காற்று சுவாசிப்பதால் நமது உடலில் மிகவும் மேம்படும். இங்குள்ள இயற்கை காட்சிகள் மிகவும் அழகானதாகவும் இருக்கும்.
சிறப்பு தினங்கள்: 
  • பௌர்ணமி அன்று ஆண்டுக்கு 12 முறை பௌர்ணமி வருகிறது. எனவே வருடத்திற்கு 12 முறை இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த தினத்தன்று திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி தரிசனம் பெறுவார்கள். 
  • கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மிகவும் அதிகளவில் காணப்படுவார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த கார்த்திகை தீபமானது மலையின் மீது ஏற்றப்படுகிறது ‌ எனவே நீங்கள் அதனை கார்த்திகை தினத்தன்று சென்று நேரில் காணலாம் அல்லது தொலைக்காட்சியில் காணலாம். 
  • இந்த கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் மலையின் மீது ஏற்றப்படுகிறது. மலையின் கீழ்பகுதியில் இருந்து பார்த்தால் கூட தீபமானது மிகவும் பிரகாசமாக தெரியும். 
  • கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் அனைவரும் ஒளிவிளக்கு ஏற்றி மிகவும் அன்று இரவு அந்த மாதத்தில் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும்.
  •  கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை சுற்றியே அதிக அளவு பக்தர்கள் நடமாட்டம் இருக்கின்றன.நீங்கள் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் கார்த்திகை தீபமானது வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 
  • இந்த திருவண்ணாமலை மிகவும் ஒரு புனித தலமாக மதிக்கப்படுகிறது.
  • மகா சிவராத்திரி அன்று ஒரு உன்னத ஆன்மீக நாளாக இருக்கிறது. இந்த மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனைவரும் அதிக அளவில் திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி வருவார்கள். 
  • மேலும் பிரதோஷம் மற்றும் அமாவாசை அன்று திருவண்ணாமலை சிறப்பு வழிபாட்டு நாளாக இந்த நாட்கள் கருதப்படுகிறது. இந்த கிரிவலம் சுற்றும் பொழுது உங்களுக்கு தேவையான அனைத்தும் கிரிவல பாதையில் கிடைக்கின்றன. 
  • திருவண்ணாமலையில் மிகவும் பிரபலமான அண்ணாமலையார் கோயில் இந்த தினத்தன்று பூஜை செய்து அலங்கரித்து மிகவும் சிறப்பாக பூஜை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post